History

Home / History

Our History

rd;dpjpahd; rupj;jpuk;

கந்த புராணப் படலத்திலே செல்வச் சந்நிதி திருத்தலத்தில் வேலன் எழுந்தருளியமைக்கான வரலாற்றுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எவ்வாறெனில் இற்றைக்கு 2000 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்திலே முருகப் பெருமான் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று சூரபத்மன் முதலிய அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பராசக்தி அளித்த சக்தி வேலுடனும், இலட்சத்தொன்பது படை வீரர்களுடனும் தென் திசை நோக்கிப் பயணித்து திருச்செந்தூரை வந்தடைந்தார். திருச்செந்தூரில்  இருந்து கொண்டு தனது வீரம் மிகுந்த படைத் தளபதியாகிய வீரபாகு தேவரை சூரபத்மனுடைய மகேந்திரபுரி நோக்கி தூது அனுப்புகின்றார்… வீரபாகு தேவரும் முருகப் பெருமானுடைய வேண்டுகோளை ஏற்று மகேந்திரபுரி நோக்கித் தூது செல்கையில் சந்திக்காலம் வரவே முன்பு வல்லிநதி என்று அழைக்கப்பட்ட தற்போதைய தொண்டைமான் ஆற்றங்கரையில் கால் பதித்து தரித்து அவ் ஆற்றிலே ஸ்நானம் செய்து வல்வை இணை ஆற்றங்கரையோரம் இருந்த பூவரச மரத்தடியில் தான் கொண்டு வந்த வேலை நிறுத்தி முருகப் பெருமானுக்குச் சந்திக்காலப் பூஜை செய்து வழிபட்டார். இதன் காரணத்தினாலேயே இவ் ஆலயம் செல்வச் சந்நிதி என்ற காரணச் சிறப்புப் பெயருடன் மிளிர்கின்றது.

பிற்பட்ட காலத்திலே பரதவர் குலத்தில் பிறந்த மருதர் கதிர்காமர் தொண்டைமான் ஆற்றிலே தொழில் புரிந்து கொண்டிருக்கையில் முருகப்பெருமான் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து மருதர் கதிர்காமரை ஆற்றங்கரையோரம் அழைத்து நின்றார். மருதர் கதிர்காமரோ கரைக்கு வருவதற்கு மறுப்புத் தெரிவித்து நிற்க அவரை முருகப் பெருமான் வற்புறுத்தி கரைக்கு வருமாறு அழைத்து நின்றார். மருதர் கதிர்காமர் ஆற்றங்கரைக்கு வந்து தன்னை அழைத்ததிற்கான காரணத்தை ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்த முருகப் பெருமானிடம் கேட்டு நிற்க அச் சிறுவனோ மருதர் கதிர்காமரோடு அன்போடு கதை பேசி நின்றார்.

பின்னர் அச் சிறுவன் ஆங்கோர் இடம் காட்டி அவ் இடத்திலே குடில் ஒன்றை அமைத்து அறுபத்தைத்து ஆலமிலைகளிலே அன்பொழுக அமுத்திட்டு பயற்றங் கறியையும் பக்குவமாய் செய்து படைத்து ஆங்கே பூஜை  வழிபாடு புரிந்திட வேண்டுமென்றார். வியப்படைந்த கதிர்காமர் ஆடு மேய்க்கும் சிறுவனிடம் விளக்கங்கள் கேட்டிட ஆடு மேய்க்கும் சிறுவன் முருகனென தன்னை உணர்த்தி நின்றார். மருதர் கதிர்காமரோ தான் பிராமணர் அல்லாத குலத்தில் பிறந்ததினால் மந்திரங்கள் மற்றும் பூஜை முறை தெரியாத தன்மையினை முருகப்பெருமானிடம் குறிப்பிட்டு நின்றார்.

முருகப் பெருமானோ “கலங்காதே கதிர்காமா” என அவரை அன்போடு தேற்றி தான் உறைகின்ற கதிர்காமம் என்கின்ற திருத்தலத்திற்கு அவரை அழைத்துச் சென்று அங்குள்ள பூஜை முறைகளையெல்லாம் தான் உணர்த்தி மந்திரம் எதனையும் மனதிலே கொள்ளாமல் வெண்ணிறத் துணியால் வாயை மூடிக் கட்டி நின்று மௌனித்தாங்கு மனதிலே தமையமர்த்தி புனிதம் மிகு பூஜை செய்ய வேல் ஒன்றையும் கையளித்து தொலை தூரம் சென்றதுமே ஒளி வடிவாகி மறைந்தார்.

Myar; rpwg;Gf;fs;

இவ் ஆலயமானது மூர்த்தி, தல, தீர்த்தம், சற்குரு என்பன ஒருங்கே அமையப் பெற்ற சிறப்புக்கு உரியது.

  • pngwing.com (6)
    மூர்த்தி: ஆற்றங்கரை வேலன்
  • pngwing.com (6)
    தலம்: செல்வச்சந்நிதி
  • pngwing.com (6)
    தீர்த்தம்: வேலன் தீர்த்தம்
  • pngwing.com (6)
    சற்குரு :பாலமுருகன்
  • pngwing.com (6)
    தல விருட்சம் :மங்களப் பூவரசு

நீர் வளம், நில வளம், நிழல் வளம் போன்ற தன்மையில் அமைந்த பல வளங்கள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் ஆலயமாக செல்வச் சந்நிதி திகழ்கின்றமை சிறப்புக்குரியதாகும்.

இவ் ஆலயமானது சந்நிதி முருகன், சின்னக் கதிர்காமக் கந்தன், செல்லக் கதிர்காமக் கந்தன், கல்லோடைக் கந்தன், அன்னதானக் கந்தன், ஆற்றங்கரை வேலன் போன்ற பல காரணப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது.

மேலும் சித்தர்கள் அதிகம் நாடுகின்ற ‘ஈழத்துத் திருத்தலம்’ என்ற பெருமைக்குரிய ஆலயமாகும்.

கந்த புராண கலாச்சாரத்தின் மகிமை, பெருமைகளைப் பேணி வரும் தன்மையில் முன்னணி வகிக்கின்றமை இவ் ஆலயத்தின் சிறப்பினை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆலயத்தைச் சூழ  அன்ன சத்திரங்களும், மடங்களும் அமையப் பெற்று தினமும் இவ் ஆலயத்தை நாடி வருவோருக்கு அரும் பசி தீர்த்து பெரும் பணி புரிகின்ற சிறப்பு வாய்ந்த ஆலயமாகும்.

இவ் ஆலயத்திற்கும் கதிர்காமக் கந்தன் ஆலயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

இவ் ஆலயமானது கி.மு 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என இப் பிரதேசத்தை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்திய போது கிடைக்கப் பெற்ற பெருங் கற்கால பண்பாட்டிற்குரிய பொருட்களைக் கொண்டு உறுதிப்படுத்த முடிகின்றமை சிறப்புக்குரியது ஆகும்..

செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் பற்றி போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தருடைய ஆவணங்களிலும் ஆங்கிலேயருடைய” Temples of Northern Sri Lanka” என்ற நூலிலும் குறிப்பிட்டு உள்ளமை இவ் ஆலயத் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

வடமராட்சியில் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயமாக திகழ்ந்து வருகின்ற இவ் ஆலயம் வரலாற்றிலும், பண்பாட்டிலும், தொல்லியல் ஆய்வுகளின் பின்னணியிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயமாகத் திகழ்கின்றது

Mya mw;Gjq;fs;

வேலன் திருத்தலத்தின் தோற்றமே ஒரு அற்புத நிகழ்வாகும்.

எவ்வாறெனில் முருகப்பெருமான் ஆடு மேய்க்கும் சிறுவனாக ஆற்றங்கரையோரம் வந்து ஆற்றிலே தன் தொழிலை புரிந்து கொண்டிருந்த மருதர் கதிர்காமரை ஆற்றங்கரைக்கு வருமாறு அழைத்து அவரிடம் வேலொன்றை வழங்கி ஒளி வடிவாகி மறைந்தமை ஒரு அற்புதச் செயலே ஆகும்.

கதிர்காமத் திருத்தலத்திலே மகோற்சவம் நிறைவெய்திய பின்னர் முருகப் பெருமான் இரவோடு இரவாக சந்நிதி திருத்தலம் வந்து கதிர்காமரிடம் தனது களைப்பு போக பயற்றம் துவையல் வாங்கி உண்டு தாகம் தீர இளநீரும் பெற்று அருந்தியமை ஒரு அற்புதம்.

மருத்துவரால் குணப்படுத்த முடியாத நோயாளிகள் கூட இத் திருத்தலத்தில் வந்து தங்கி இங்கு வழங்கப்படுகின்ற பிரசாதம் மற்றும் அபிஷேக நீர் என்பவற்றை வாங்கி அருந்தி நோய் நீங்கிச் செல்கின்றமை ஒரு அற்புதமாகும்.

தேவலோக இறைதூதுவரான கந்தர்வன் வியாழ பகவானின் சாபத்துக்கு உள்ளாகி இத் தலத்தில் உள்ள முருகப் பெருமனை தியானித்து சாப விமோட்சணம் பெற்று முத்தி அடைந்தமை ஒரு அற்புதம்.

சிறுகுடிலாக இருந்த தனது உறைவிடத்தை பெருங்கோயிலாகத் திகழச் செய்ய பூசகரிடம் உருமாறிய ஒருவராக வந்து சுற்று மண்டபம் அமைக்குமாறு பணித்து மறைந்தமை ஒரு அற்புதம்.

சுற்று மண்டப வேலைகளுக்கு மறைபொருளாய் நின்று வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தமை ஒரு அற்புதம்.

உப்பு நீரில் விளக்கு எரிகின்றமை ஒரு அற்புதம் ஆகும்.

தமது திருத்தலத்திலே, தம் திருமுன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பக்தர்களுக்கு ஏற்படுகின்ற உச்சக்கட்ட உபாதைகளை, உடல் வருத்தங்களை அன்றே போக்கி, அவர்களை வழமையான நிலைக்கு மீளச் செய்வதும் ஒரு அற்புதமே ஆகும். இவ்வாறாக செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் பல அற்புதச் செயல்கள் இடம் பெற்ற வண்ணமே உள்ளன.

rpj;ju;fs; kw;Wk; re;epahrpfs;

ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் எப்பபொழுதும் சித்தர்கள் நடமாடுகின்ற ஆலயமாகவே இருந்து வருகின்றது தம்மை வெளிப்படுத்தியும் வெளிப்படுத்தாமலும் இவ்வாலயச்சூழலில் சித்தர்கள் நடமாடிக்கொண்டே இருக்கின்றனர் சிவயோகசுவாமிகள், முருகேசு சுவாமி கள் உட்பட எமது நாட்டைச்சேர்ந்த சித்தர்கள் பலர் இவ்வாலயச்சூழலில் தங்கள் திருவடித் தடங்களைப் பதித்துள்ளனர். இப்பேறு பெற்ற புண்ணிய பூமியில் ஜேர்மன் சுவாமிகள் ஜேர்மனி, ஆனைக்குட்டிசுவாமிகள் பிரித்தானியா, நரிக்குட்டிசுவாமிகள் அவுஸ்திரேலியா, பன்றிக்குட்டிசுவாமிகள் தென்னிந்தியா,என்றழைக்கப்படும் வெளிநாட்டுச்சித்தர்களும் இவ்வாலயச்சூழலில்சமகாலத்தில் வாழ்ந்துள்ளனர். 1965ஆம் ஆண்டு ஆவணிமாதம் 26ஆம் திகதி வீரகேசரிப்பத்திரிகையிலும் இந்த நான்கு சித்தர்கள் பற்றிய விசேட செய்தி ஒன்றும்பிரசுரமாகியிருந்தது.இவர்களில் ஜேர்மன் சுவாமிகள் செல்வச்சந்நிதியில் மிகநீண்ட காலம் தனது தவவாழ்க்கையை வாழ்ந்து 1980 இல் இப்புண்ணிய பூமி சந்நிதியில் சமாதியடைந்ததும் குறிப்பிடத்தக்கது

klq;fSk; md;djhdKk;

மெத்தவீட்டுக்கந்தசாமி ஐயர் உலககுருநாதன் ஐயர் அன்னதான மடம்

தினம் தினம் மானிடனுக்கு ஏற்படுகின்ற துன்பங்களுக்கு நிவர்த்தி கிடைப்பதுடன் தினந்தினம் நமக்கேற்படுகின்ற பசிப்பிணியையும் போக்குகின்ற புண்ணிய தலமாக காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஆலயம்தான் அன்னதானக்கந்தன் (செல்வச்சந்நிதி முருகப்பெருமான்)

அன்னதானக்கந்தனுக்கு பூசை செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் மருதர் கதிர்காமர் வழிவந்த பூசகர்கள். இவர்கள் பூசை செயற்பாடுகளுடன் சம நேரத்தில் ஆலயத்தில் அடியவர்களுக்கு நித்திய அன்னதானப்பணியினையும் மேற்கொண்டுவருகின்றனர்.


சந்நிதியில் பூசை முடிந்ததும் அடியவர்களுக்கு அமுது வழங்கும் முறையினை ஏறத்தாழ 1915 களில் முதன்முதலில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தியவர் அமரர் உலககுருநாதன் ஐயர் அவர்களின் தந்தை மெத்த வீட்டுக்கந்தசாமி ஐயர் அவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

இவ்வாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி ஆலயத்தில் பிரதம பூசகராக இருந்து பூசைமுறைகளை மேற்கொண்டு வந்ததுடன் அடியவர்கள் அனைவருக்கும் நிறைவாகப்பசியாற்றிச்செல்லும் வகையில் ஆலயத்தில் அன்னதானப்பணியையும் முதன் முதலில் 1998 இல் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி, அனைவரும் பாராட்டும் வகையில் மேற்கொண்டுவந்து அண்மையில் அமரத்துவமடைந்தவர்தான் சிவஸ்ரீ உலககுருநாதன் ஐயர் அவர்களாவர்.

உலககுருநாதன் ஐயர் அவர்களுடைய பணிகளுக்கு உற்றதுணையாக இருந்தவர் அவர்தம் துணைவியார் புஷ்பராணி அவர்கள்


அமரர்உலககுருநாதன் ஐயர் அவர்கள் விட்டுச்சென்ற அன்னதானப்பணியையும் ஆன்மீகப்பணியையும் முருகப்பெருமானின் கருணையுடன் முன்னெடுத்துச்செல்கின்றோம்

Image Accordion #1

Image Accordion Content Goes Here! Click edit button to change this text.

Image Accordion #2

Image Accordion Content Goes Here! Click edit button to change this text.

Image Accordion #3

Image Accordion Content Goes Here! Click edit button to change this text.

Image Accordion #4

Image Accordion Content Goes Here! Click edit button to change this text.

Muk;g fu;jhtpd; njhlf;f tuyhW

மெத்தவீட்டுக்கந்தசாமி ஐயர் உலககுருநாதன் ஐயர் அன்னதான மடம் தினம் தினம் மானிடனுக்கு ஏற்படுகின்ற துன்பங்களுக்கு நிவர்த்தி கிடைப்பதுடன் தினந்தினம் நமக்கேற்படுகின்ற பசிப்பிணியையும் போக்குகின்ற புண்ணிய தலமாக காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஆலயம்தான் அன்னதானக்கந்தன் (செல்வச்சந்நிதி முருகப்பெருமான்) அன்னதானக்கந்தனுக்கு பூசை செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் மருதர் கதிர்காமர் வழிவந்த பூசகர்கள். இவர்கள் பூசை செயற்பாடுகளுடன் சம நேரத்தில் ஆலயத்தில் அடியவர்களுக்கு நித்திய அன்னதானப்பணியினையும் மேற்கொண்டுவருகின்றனர். சந்நிதியில் பூசை முடிந்ததும் அடியவர்களுக்கு அமுது வழங்கும் முறையினை ஏறத்தாழ 1915 களில் முதன்முதலில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தியவர் அமரர் உலககுருநாதன் ஐயர் அவர்களின் தந்தை மெத்த வீட்டுக்கந்தசாமி ஐயர் அவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி ஆலயத்தில் பிரதம பூசகராக இருந்து பூசைமுறைகளை மேற்கொண்டு வந்ததுடன் அடியவர்கள் அனைவருக்கும் நிறைவாகப்பசியாற்றிச்செல்லும் வகையில் ஆலயத்தில் அன்னதானப்பணியையும் முதன் முதலில் 1998 இல் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி, அனைவரும் பாராட்டும் வகையில் மேற்கொண்டுவந்து அண்மையில் அமரத்துவமடைந்தவர்தான் சிவஸ்ரீ உலககுருநாதன் ஐயர் அவர்களாவர். உலககுருநாதன் ஐயர் அவர்களுடைய பணிகளுக்கு உற்றதுணையாக இருந்தவர் அவர்தம் துணைவியார் புஷ்பராணி அவர்கள் அமரர்உலககுருநாதன் ஐயர் அவர்கள் விட்டுச்சென்ற அன்னதானப்பணியையும் ஆன்மீகப்பணியையும் முருகப்பெருமானின் கருணையுடன் முன்னெடுத்துச்செல்கின்றோம் அத்துடன் உலககுருநாத ஐயா அவர்களின் எண்ணத்தில் உதித்ததன் வண்ணமாக சந்நிதி முருகன் Temple என்ற இணையத்தளத்தினை அவர்களின் நினைவாக ஆரம்பித்துள்ளோம்

Mya mw;Gjq;fs;

Scroll to Top